Posts

Showing posts with the label # | #Bull | #A | #Reg

தமிழகத்தில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள்!?402593379

Image
தமிழகத்தில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள்!? நாடு முழுவதும் கொரோனா அதிகரித்து வருவதால் தமிழகத்தில், கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த சுகாதாரத்துறை ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில், கடந்த சில வாரங்களாக, கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சென்னை, மும்பை, திருவனந்தபுரம், பெங்களூரு, டெல்லி போன்ற தலைநகரங்களில் கொரோனா மீண்டும் வேகம் எடுப்பது, பொது மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. இதை அடுத்து, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கண்காணிப்பை தீவிரப்படுத்தும்படி, தமிழகம், மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, டெல்லி ஆகிய மாநில அரசுகளுக்கு, மத்திய சுகாதாரத் துறை அமைச்சக செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் வாயிலாக அறிவுறுத்தினார்.   தமிழகத்தில் மேலும் 195 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. சென்னையில் 95, திருவள்ளூரில் 33, காஞ்சிபுரத்தில் 30, செங்கல்பட்டில் புதிதாக 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள

கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்ட கர்ப்பிணி உயிரிழப்பு.. மருந்து கடைக்கு சீல்

Image
கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்ட கர்ப்பிணி உயிரிழப்பு.. மருந்து கடைக்கு சீல் நாமக்கல் மாவட்டத்தில் மருத்துவர் பரிந்துரையின்றி  மருந்தகத்தில்   கருக்கலைப்பு மருந்து வாங்கி சாப்பிட்ட கர்ப்பிணி  ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.    திருச்செங்கோடு  அருகே  இராமாபுரம் கிராமத்தில் உள்ள கொசவம்பாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி  ரம்யா (வயது 29) கர்ப்பமாக இருந்துள்ளார். திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக  தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட  ரம்யா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கர்ப்பிணி  ஒருவர் உயிரிழந்த செய்தியை அறிந்து,   நாமக்கல் ஆட்சியர்  ஸ்ரேயா பி சிங்,  அவரது இறப்பின் உண்மைக் காரணத்தை கண்டறிய உத்தரவிட்டிருந்தார்.  இதற்காக குடும்ப நலத்துறை துணை இயக்குநர் மருத்துவர் வளர்மதி தலைமையில் அரசு மருத்துவர்கள் மற்றும் மருத்துவ அலுவலர்கள், காவல்துறை, வருவாய்த்துறை அலுவலர்களைக் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டது.     விசாரணையில்,  உயிரிழந்த கர்ப்பிணி  ரம்யா , மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் தனது வீட்டின் அருகில் உள்ள மருதம் என்னும் மருந்துக்கடையில் கருகலை