தமிழகத்தில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள்!?402593379


தமிழகத்தில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள்!?


நாடு முழுவதும் கொரோனா அதிகரித்து வருவதால் தமிழகத்தில், கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த சுகாதாரத்துறை ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில், கடந்த சில வாரங்களாக, கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சென்னை, மும்பை, திருவனந்தபுரம், பெங்களூரு, டெல்லி போன்ற தலைநகரங்களில் கொரோனா மீண்டும் வேகம் எடுப்பது, பொது மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.

இதை அடுத்து, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கண்காணிப்பை தீவிரப்படுத்தும்படி, தமிழகம், மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, டெல்லி ஆகிய மாநில அரசுகளுக்கு, மத்திய சுகாதாரத் துறை அமைச்சக செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் வாயிலாக அறிவுறுத்தினார்.

 

தமிழகத்தில் மேலும் 195 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. சென்னையில் 95, திருவள்ளூரில் 33, காஞ்சிபுரத்தில் 30, செங்கல்பட்டில் புதிதாக 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் அமலாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. நோய் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில், முதற்கட்டமாக, கட்டுப்பாடுகள் அமலாக வாய்ப்பு அதிக வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

 

பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம், அலுவலகங்கள், கடைகள் போன்றவற்றில் முகக்கவசம் அணிவது கட்டாயம், சமூக இடைவெளி கடைபிடிப்பது கட்டாயம் போன்ற கட்டுப்பாடுகள் அமலாக வாய்ப்பு உள்ளது. இது குறித்த அறிவிப்பு வரும் நாட்களில் சுகாதாரத் துறை சார்பில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments

Popular posts from this blog