மீண்டும் திரையுலகில் அதிர்ச்சி!! மற்றும் ஒரு இயக்குநர் மரணம்!!


மீண்டும் திரையுலகில் அதிர்ச்சி!! மற்றும் ஒரு இயக்குநர் மரணம்!!


தெலுங்கு சினிமாவின் மூத்த இயக்குனர்  வித்யாசாகர் ரெட்டி . இவருக்கு வயது 70 . இவர் கடந்த சில காலமாகவே வயது மூப்பு மற்றும் உடல் நலக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  வித்யாசாகர்  நரேஷ் மற்றும் விஜயசாந்தி நடிப்பில் 1983ல் வெளியான ராகாசி லோயா  படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து பல வெற்றி படங்களை இயக்கிய முன்னணி இயக்குனர்களில் ஒருவராக தம்மை நிலைநிறுத்திக் கொண்டார். இவருடைய மறைவு திரையுலக பிரபலங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நடிகர் சிரஞ்சீவி உட்பட பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

திரையுலகில் அண்மைக்காலமாக அடுத்தடுத்து இழப்புகள் ஏற்பட்டு வருகிறது. மூத்த இயக்குநர்கள், இளம் கலைஞர்கள் மரணம் திரைத்துறையினருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மூத்த இயக்குநகர்கள் ஷண்முகப்பிரியன், கே.விஸ்வநாத், வாரிசு படத்தின் கலை இயக்குநர் சுனில் பாபு இவர்களின்  மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

 

பல வெற்றி படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக திகழ்ந்தார். இந்நிலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர் சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவருடைய மறைவு திரையுலகில் பிரபலங்கள் மத்தியில் பெரும்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவருடைய மறைவிற்கு பிரபலங்கள், நடிகர்கள், ரசிகர்கள், நண்பர்கள் பலரும் இரங்கல் செய்தியை பதிவிட்டு வருகின்றனர்.

Comments

Popular posts from this blog