விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரியில் 3 மாணவர்களுக்கு கொரோனா567148946


விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரியில் 3 மாணவர்களுக்கு கொரோனா


விருதுநகர்:

விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தின் அருகே செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் 125 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக விடுதி வசதியும் இருக்கிறது.

இந்த நிலையில் மாணவர்கள் சிலருக்கு கொரோனா மற்றும் காய்ச்சல் அறிகுறி இருந்தது. இதையடுத்து விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரியின் மாணவ-மாணவிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த 3 மாணவர்களும் தனிமைபடுத்தப்பட்டனர். அவர்களை தொடர்ந்து தனிமைப்படுத்தி வைத்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் மாணவர்களுக்கு வகுப்பு எடுத்த பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து மருத்துவக்கல்லூரியின் வகுப்பறைகள், விடுதி அறைகள் மற்றும் அனைத்து இடங்களிலும் இன்று கிருமினிநாசினி தெளித்தல் உள்ளிட்ட சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்லூரியின் டீன் சங்குமணி தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

500 தியேட்டர்கள்.. 4000 காட்சிகள்.. எந்த வெளிநாட்டில் இப்படி விக்ரம் மாஸ் காட்டப் போகுது தெரியுமா?

A pale girl s must