அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்: அரசாணை வெளியிட்ட தமிழக அரசு!


அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்: அரசாணை வெளியிட்ட தமிழக அரசு!


தமிழ்நாட்டில்‌ மூவாயிரம் ஆசிரியர்களுக்குபணி நீட்டிப்புசெய்து பள்ளிக்கல்வித்‌ துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

அரசுப்‌ பள்ளிகளில்‌ மாணவர்கள்‌ சேர்க்கை அதிகரித்துள்ளதால்‌, ஆசிரியர்களுக்கு மேலும்‌ ஓராண்டு பணி நீட்டிப்பு செய்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அரசு பள்ளிகளில்‌ பணியாற்றும்‌ ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித் துறை சார்பில்‌, விருப்ப இடமாறுதல்‌, பணி நிரவலுக்கான இணைய கவுன்சிலிங்‌, மூன்று மாதங்களுக்கு முன்‌ நடத்தப்பட்டது. அதன்படி, மூவாயிரம் ஆசிரியர்கள்‌ கூடுதல்‌ இடங்களில்‌ பதவியேற்றனர்‌.

அதிமுக ஒற்றை தலைமையா இவரை அறிவிங்க: ஓபிஎஸ் போட்ட குண்டு, அதிர்ந்து போன இபிஎஸ்

இவர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக சம்பளம்‌ நிறுத்தப்பட்டிருந்தது. அரசாணை இல்லாமல்‌, புதிய இடங்களுக்கு சம்பளம்‌ வழங்க முடியாது என்று நிதித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சூழ்நிலையில் பள்ளிக்கல்வித்‌ துறை சார்பில்‌ பணி நீட்டிப்பிற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும்‌, ஆசிரியர்களுக்கு ஊதியம்‌ மற்றும்‌ இதர படிகளை வழங்கிடவும்‌ பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறையின் இந்த அறிவிப்பால் ஆசிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அமைச்சர்களை விரட்டும் ஸ்டாலின்: பிடிஆர் ஓபன் டாக்!

இதேபோல் ஆசிரியர்கள் சங்கங்கள் முன்வைத்த பல்வேறு கோரிக்கைகளையும் தமிழக அரசு பரிசீலித்து புதிய அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.

Comments

Popular posts from this blog