விடிந்தால் திருமணம்.. எமனாக வந்த கன்டெய்னர் லாரி.. புதுச்சேரி சோகம்!


விடிந்தால் திருமணம்.. எமனாக வந்த கன்டெய்னர் லாரி.. புதுச்சேரி சோகம்!


விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. இதில், முத்துக்குமாரசாமி மற்றும் கார் ஓட்டுனர் முத்து ஆகியோர் இருந்தனர். கார் புதுச்சேரி ரெட்டியார்பாளையம் அருகே வந்தபோது புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி எதிர்பாராதவிதமாக கார் மீது மோதியது.

இதில், கார் அப்பளம் போல் நொறுங்கியது. அந்த காரில் பயணம் செய்த இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்ற போலீசார் கிரேன் உதவியுடன் காரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.

முதல்கட்ட விசாரணையில் கன்டெய்னர் லாரியை ஓட்டி வந்த டிரைவர் தூங்கியதால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கன்டெய்னர் லாரி சாலையின் தடுப்பை தாண்டி சென்று எதிரே வந்த கார் மீது மோதியது தெரியவந்தது.மேலும், கன்டெய்னர் லாரியை ஓட்டி வந்த டிரைவர் தப்பியோடியதால் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி மதுப்பிரியர்கள் உஷார்!

புதுச்சேரிக்கு திருமண நிகழ்ச்சிக்கு வந்தபோது கன்டெய்னர் லாரி கார் மீது மோதிய விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந் சம்பவம் புதுச்சேரியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Comments

Popular posts from this blog

Toasted Pecan Streusel Pumpkin Pie