புதுச்சேரி தலைமை செயலாளராக ராஜீவ் வர்மா பொறுப்பேற்பு!
புதுச்சேரி மாநில தலைமை செலாளராக கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் அஸ்வனி குமார் ஐ.ஏ.எஸ் பணியாற்றி வந்தார். மத்திய அரசு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்வது வழக்கம். ஆனால், புதுச்சேரியின் தலைமை செயலாளராக அஸ்வனி குமார் பொறுப்பேற்று 4 ஆண்டுகள் ஆன நிலையிலும் அவர் தொடர்ந்து பணியாற்றி வந்தார். இதன் பின்னல், பாஜகவின் சதித் திட்டம் உள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சிகள் குற்றமசாட்டி வந்தன.
அதனை உறுதிப்படுத்தும் வகையில், புதுச்சேரி அரசின் திட்டங்களுக்கு தலைமை செயலாளர் அஸ்வனி குமார் அனுமதி வழங்காமல் தடையாக இருந்தார். இந்தநிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தலைமை செயலாளரை மாற்றக்கோரி மத்திய அரசுக்கு முதலமைச்சர் என்.ரங்கசாமி கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment